செய்யக்கூடாத செயல்கள்
ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது, பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது.
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது, பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது.
மேலும் கணவன் கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1. கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2. தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3. நிலையில் அமரக்கூடாது
4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11. ஆலயத்தில் இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
12. ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.
1. கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2. தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3. நிலையில் அமரக்கூடாது
4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11. ஆலயத்தில் இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
12. ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும், தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும், தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன், வில்வமரம், பசு, தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும், எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!
இறை பணியில்
வாசு ஜி.
No comments:
Post a Comment