லீலை கண்ணன் கதைகள் .........9
ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்திற்கு எடுத்து செல்லுதல்.....
சென்ற பதிவில் மகாவிஷ்ணு குழந்தையாக மாறியதை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில் பார்ப்போம்.
தன்னை எடுத்துக் கொண்டு போய் கோகுலத்தில் உள்ள நந்தன் வீட்டில் விட்டுவிடும்படி கிருஷ்ணன் வசுதேவரைக் கேட்டுக்கொண்டார். இது எப்படி முடியும் என்று வசுதேவரும் தேவகியும் திகைத்தார்கள். சிறைக்கதுவுகள் பூடப்பட்டிருப்பதோடு, ஆயுதம் தாங்கிய வீரர்கள் எங்கும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வசுதேவர் குழந்தையை மெல்ல எடுத்து அதை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடையை தம் தலைமேல் வைத்துக் கொண்டார். என்ன வியப்பு! பெரிய பூட்டுகளாலும் சங்கிலிகளாலும் பூட்டப்படிருந்த சிறைக் கதவுகள் தாமாக திறந்துகொண்டன. வியப்புடன் வெளியே வந்தார் வசுதேவர்.
காவலாளிகள் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். திடீரென்று ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ, பெருமழை பெய்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குப் படுக்கையாக இருந்த ஆயிரம்தலை ஆதிசேடன் திடீரென்று வசுதேவருக்கு முன்னால் தோன்றினார். தம் தலைவனான கிருஷ்ணன் மழையில் நனைய அவர் எப்படி சம்மதிப்பார்? அதனால் அவர் படம் எடுத்துத் தந்தையும் குழந்தையும் மழையில் நனையாதபடி காப்பாற்றினார்.
பெய்த மழை காரணமாக யமுனாநதி பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தாண்டித்தான் கோகுலம் செல்ல வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் வசுதேவர் திகைத்து நின்றார். அப்பொழுது திடீரென்று நதி நடுவில் விலகி அவருக்கு வழிவிட்டது. அவர் நதியைக் கடந்து, நேரே நந்தன் வீட்டுக்குச் சென்றார். உடனே நந்தனின் தேவியான யசோதையின் அறைக்குச் சென்றார். வீட்டில் எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் யாரும் அவர் வந்ததைப் பார்க்கவில்லை.
யசோதையின் பக்கத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்தார். தாம் கொண்டு வந்திருந்த குழந்தையை யசோதையின் பக்கத்தில் கிடத்திவிட்டு அந்த பெண் குழந்தையை எடுத்து தம் கூடையில் வைத்துக் கொண்டு மீண்டும் மதுரா திரும்பினார். அவர் சிறைக்குள் வந்து சேர்ந்ததும் சிறைக்கதவுகளும் தாமாகவே மூடிக்கொண்டன. நடந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் தெரியாது.....
இறை பணியில்
வாசு ஜி.
ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்திற்கு எடுத்து செல்லுதல்.....
சென்ற பதிவில் மகாவிஷ்ணு குழந்தையாக மாறியதை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில் பார்ப்போம்.
தன்னை எடுத்துக் கொண்டு போய் கோகுலத்தில் உள்ள நந்தன் வீட்டில் விட்டுவிடும்படி கிருஷ்ணன் வசுதேவரைக் கேட்டுக்கொண்டார். இது எப்படி முடியும் என்று வசுதேவரும் தேவகியும் திகைத்தார்கள். சிறைக்கதுவுகள் பூடப்பட்டிருப்பதோடு, ஆயுதம் தாங்கிய வீரர்கள் எங்கும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வசுதேவர் குழந்தையை மெல்ல எடுத்து அதை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடையை தம் தலைமேல் வைத்துக் கொண்டார். என்ன வியப்பு! பெரிய பூட்டுகளாலும் சங்கிலிகளாலும் பூட்டப்படிருந்த சிறைக் கதவுகள் தாமாக திறந்துகொண்டன. வியப்புடன் வெளியே வந்தார் வசுதேவர்.
காவலாளிகள் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். திடீரென்று ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ, பெருமழை பெய்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குப் படுக்கையாக இருந்த ஆயிரம்தலை ஆதிசேடன் திடீரென்று வசுதேவருக்கு முன்னால் தோன்றினார். தம் தலைவனான கிருஷ்ணன் மழையில் நனைய அவர் எப்படி சம்மதிப்பார்? அதனால் அவர் படம் எடுத்துத் தந்தையும் குழந்தையும் மழையில் நனையாதபடி காப்பாற்றினார்.
பெய்த மழை காரணமாக யமுனாநதி பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தாண்டித்தான் கோகுலம் செல்ல வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் வசுதேவர் திகைத்து நின்றார். அப்பொழுது திடீரென்று நதி நடுவில் விலகி அவருக்கு வழிவிட்டது. அவர் நதியைக் கடந்து, நேரே நந்தன் வீட்டுக்குச் சென்றார். உடனே நந்தனின் தேவியான யசோதையின் அறைக்குச் சென்றார். வீட்டில் எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் யாரும் அவர் வந்ததைப் பார்க்கவில்லை.
யசோதையின் பக்கத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்தார். தாம் கொண்டு வந்திருந்த குழந்தையை யசோதையின் பக்கத்தில் கிடத்திவிட்டு அந்த பெண் குழந்தையை எடுத்து தம் கூடையில் வைத்துக் கொண்டு மீண்டும் மதுரா திரும்பினார். அவர் சிறைக்குள் வந்து சேர்ந்ததும் சிறைக்கதவுகளும் தாமாகவே மூடிக்கொண்டன. நடந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் தெரியாது.....
இறை பணியில்
வாசு ஜி.
No comments:
Post a Comment