Monday, 1 August 2016

Guru peyarchi 02-08-2016

ஆடிமாதமும் குருப்பெயர்ச்சியும்

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி வரும் துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ஆம் தேதி, 02-08-2016 செவ்வாய்கிழமை காலை 09.27 (08.37 நாழிகைக்கு ) கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி 02-09-2017 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யுவுள்ளார். கன்னியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 17-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரிக்க உள்ளார்.
(திருக்கணிதப்படி 11-08-2016 முதல் 11-09-2017 வரை).

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர்/ குருபலம் பெறும் ராசியினர் - ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்

 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேஷம் - எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

ரிஷபம் - எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் - யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

கடகம் - உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

சிம்மம் - காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி - கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

துலாம் - நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் - கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு - வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகரம் - மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம் - மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீனம் - இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

ஆடி மாதமென்றாலே அம்மன் மாதம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வருட ஆடி மாதத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. ஆடி பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஆடிஅமாவாசை என 3 நிகழ்வுகளும் இந்த ஆடி மாதத்தில் நிகழ்கிறது. தமிழிற்கு ஆடி 18 அன்று ஆடிஅமாவாசை வருகிறது. (ஆங்கிலத்திற்கு 02/08/2016.) ஆடிஅமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களிற்கு தர்ப்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசையின் சிறப்பு என்னவென்றால் கடகத்தில் உள்ள சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இணைவதாகும். இக்காலத்தில் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வரும். அவர்களிற்கு நாம் தர்ப்பணம் கொடுக்க அவை திருப்தியடைந்து நம்மை வாழ்த்தும். அன்று இரவு வீட்டில் வெளியில் ஒரு செம்பினுள் நீர் வைக்க வேண்டும். அத்துடன் ஆண்கள் கோதுமை தவிடு, பச்சரிசி தவிடு, வெல்லம், அகத்திக்கீரை கலந்து ஆண்கள் தானம் செய்ய வேண்டும். பெண்கள் சுமங்கலபொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால் நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு அவர்களின் ஆசியால் எமது வாழக்கை வளமடையும்.

ஆடிப்பூரத்தில் தானம் செய்வது அஷ்டலக்மியையும் திருப்திப்படுத்தும். சகல சம்பத்துக்களும் தேடி வரும். ஆடிப்பூரமானது வரும் ஆடி 21ம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நன்னாளில் இயலுமான வஸ்துக்களை அனைத்து உயிர்களுக்கும் தானம் வழங்கலாம்...
(ஆங்கிலத்திற்கு 5/8/2016)

பட்டுக்கு அதிபதியான குருபகவான் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கும் குருப்பெயர்ச்சி அன்று குருபகவானின் விசேட திருத்தலங்களிலோ அல்லது சிவன் கோவிலில் உள்ள நவக்கிரக வாயாழ பகவானுக்கும் சிவனுக்கும் அல்லது குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சேர்ப்பித்து உங்கள் நட்சத்திரம் கூறி வழிபட நன்மை வந்து சேரும். அன்றைய நாள் ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது சிறப்பு. கோவில்களில் நடைபெறும் குருப்பெயர்ச்சி யாகத்தில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

Thursday, 23 June 2016

Read and feel the Mother's nature

நான் படித்ததும் கண் கலங்கிய கதை...!!

இன்னிக்கு காலையில கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர். அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது. காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிகொண்டே ஓடியது.

அந்த சிறுவர்களிடம் இப்படில்லாம் செய்யாதீர்கள் அது பாவம் என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்தேன். நாய் சென்ற வழியில் சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது. அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது. அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன்.

அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன. அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது. நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன். வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது. அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி. அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே. அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பறவாயில்லை இந்தமாதிரி செய்யாதீர்கள். இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர். அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள். உஙகளால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் இல்ல பழைய சோற்றை போடுங்க அது உங்க வீட்டை பாதுகாத்து நன்றியுடன் இருக்கும்.
-

Saturday, 4 June 2016

Krishna story 14

லீலை கண்ணன் கதைகள்.....14
பூதனை என்ற அரக்கியின் வதம்....

சென்ற பதிவில் நந்தகோபர் மதுரா சென்று கம்சனுக்கு கப்பம் கட்டிவிட்டு, வசுதேவரை பார்த்து இருவரும் நலம் விசாரித்தனர். நந்தகோபர்  மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வருவதற்குள் இங்கு கிருஷ்ணன் ஒரு லீலை பண்ணிட்டான் அதை இந்த பதிவில் பார்ப்போம்.

பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கம்சன் கொல்ல விரும்பினான். அதனால் பூதனை என்ற அரக்கியை வரவழைத்தான். தன் திட்டத்தை அவளிடம் சொன்னான். அவனுக்கு உதவ அவளும் இணங்கினாள். உடனே அவள் ஓர் அழகிய பெண்ணைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு குழந்தைகளைத் தேடி நகரங்களில் அலைந்தாள். எந்த உருவம் வேண்டுமானாலும் எடுக்கும் சக்தியைக் கொண்டவள் அவள். ஒரு நாள் அவள் எல்லா நகரங்களையும் பார்த்துக் கொண்டே ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கோகுலத்தை பார்த்தாள். அதற்கு முன்னர் அவள் அங்கே சென்றதில்லை. அதனால் கீழே இறங்கினாள். ஓர் அழகிய பெண்ணாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குள் நுழைந்தாள். திருமகளே வந்துவிட்டதாக அவளைப் பார்த்து யசோதை நினைத்தாள். கோகுலத்து கோபிகைகள் எல்லார் மனதையும் அவள் கவர்ந்துவிட்டாள்.

குழந்தை கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருந்தான். பூதனை சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பக்கத்தில் இல்லை என்று தெரிந்ததும்   தொட்டிலில் இருந்த குழந்தையை கையில் எடுத்தாள். கீழே உட்கார்ந்து குழந்தையைத் தன் மடியில் கிடத்தினாள். விஷம் தடவியிருந்த தன் மார்பகங்களில் குழந்தையின் வாயை வைத்து அதனால் பாலுட்டத் தொடங்கினாள். இந்த வகையில் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்தாள். ஆனால் துஷ்டர்களைக் கொல்லுவதற்காக வந்துள்ள பகவானை யார் கொல்ல முடியும்? கிருஷ்ணன் தன் இரு சிறு பிஞ்சுக் கையினால் அவளுடைய மார்பகத்தைப் பற்றிக் கொண்டு, பாலை உறிஞ்ச ஆரம்பித்தான்.

சில நொடிகளுக்கெல்லாம் குழந்தை தன் உயிரையே உறிஞ்சிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். வலி தாங்காமல் கத்தினாள். "போதும் போதும் என்னை விட்டுவிடு" என்று அலறினாள். அலறிக் கொண்டே அவள் குழந்தையைத் தன் மார்பகத்திலிருந்து எடுக்கப் பார்த்தாள். ஆனால் கிருஷ்ணனோ பால் குடிப்பதை நிறுத்துவதாக இல்லை. இன்னும் அதிக சந்தோஷத்துடனும் மும்முரத்துடனும் அவன் பால் குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது  அவள் அலறல் சத்தத்தினால் பூமியே அதிர்ந்தது. பூதனை தன் உண்மை உருவமான அரக்கி உருவம் பெற்று செத்து கீழே விழுந்தாள். ஆனால் பயமற்ற அந்தக் குழந்தையோ அவள் உடலின் மீது அங்கும் இங்கும் தவழ்ந்து சென்று விளையாடத் தொடங்கியது.

பூதனை குரலைக் கேட்டு யசோதை அங்கு ஓடி வந்தாள். குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு அப்பால் சென்றாள் . குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டு, அதைப் பட்டாடையினால் மூடித் தூங்கச் செய்தாள். ஒன்றுமே நடக்காதது போல குழந்தை நிம்மதியாகத் தூங்கிற்று. அப்போதுதான் நந்தகோபர் மதுராவிலிருந்து திரும்பி வந்தார். அரக்கி செத்துக் கிடப்பதைப் பார்த்து அவர் நடுங்கினார். உடனே அவர் ஆயவர்கள் பலரை அழைக்க அவர்கள் அந்தப் பூதாகாரமான உடலை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி வெளியே எடுத்து சென்று சிதையின் மீது வைத்து எரித்தார்கள்.

அந்த அரக்கி எப்படி ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள் என்று எல்லோரும் நந்தகோபருக்குச் சொன்னார்கள். பெரிய ஆபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றினதற்காக அவர்கள் எல்லோரும் கடவுளை துதித்தார்கள். எல்லாத் தீய அரக்கர்களையும் அழிப்பதற்காக வந்த கடவுள்தான் அந்தக் குழந்தை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.............

இறை பணியில்
வாசு ஜி.

Sunday, 22 May 2016

Mahaperiyava Jayanthi May 22nd, Nama Japa

image

Bhagawan Nama 
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்- ஸ்ரீ மஹா பெரியவா
தர்மமே தெரியல!
ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
“அப்பா எப்டியிருக்கார்?”…
“அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா……ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்…”
மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
“…பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா…..ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து…”
“அப்பாவுக்கு என்ன வயஸ்?”
“ஸதாபிஷேகம் ஆய்டுத்து”
“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா …….ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்…..”
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.
அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்…..
“இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்….சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா……ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்…வாஸ்தவம். ஆனா…..அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!…..”
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.
எனவே, உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, “ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.
ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 14 May 2016

Simple technic to speak to ur subconscious mind

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை



ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!


ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்


Friday, 13 May 2016

Lord Krishna showed how will be Kaliyuga

கலியுகம் எப்படி இருக்கும்?

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

”அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.” –குயிலை போல.

”பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.” – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.” -பசுவை போல்.

”நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.” பாறையை தடுத்த சிறுசெடியை போல்.

இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 4 May 2016

What is Happiness?!!

எது மகிழ்ச்சி??
.*******************
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.

இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்...

இறை பணியில்
வாசு ஜி.

Thursday, 28 April 2016

Some basic advice for women prescribed in Sashthra...



பெண்களுக்கான சாஸ்திரங்கள்


பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்
சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.
இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.
அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை
ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.
ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.
வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.
பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும்.
வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.
வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.
இறை பணியில்
வாசு ஜி.

Tuesday, 5 April 2016

Sorgam and Naraham

எது சொர்க்கம்? எது நரகம்?

ஒருவன் ஒரு ரிஷியிடம் ஐயா எனக்கு சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது, உங்களால் அவற்றை எனக்கு காட்ட முடியுமா என்று கேட்க, அந்த ரிஷியும் அவனை முதலில் நரகத்திற்கு அழைத்து சென்றார். அது  சாப்பாட்டு நேரம். அங்கிருந்தவர்கள் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். சாப்பாடும் பரிமாறப் பட்டது. நரகத்தில் இருந்தவர் களுக்கு தரப்பட்ட தண்டனை என்ன வெனில் அவர்களால் கையை மடக்க முடியாது. சாப்பாட்டைக் கையில் எடுத்தார்களே ஒழிய அதைச் சாப்பிட முடியவில்லை. ஏன்  எனில் அவர்களால் கையை மடக்க முடியாது. கடைசி வரை போராடிவிட்டு சாப்பிடாமலே எழுந்து போனார்கள்.

பிறகு ரிஷி அவனை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார். அங்கும் அனைவரும் எதிர் எதிரே வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களாலும் கையை மடக்க முடியாது. ஆனால் சாப்பாட்டைக் கையில் எடுத்து ஒருவர் எதிரே இருந்தவருக்கு ஊட்டினான், எதிரே இருந்தவர் இவருக்கு ஊட்டினார். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாக எழுந்து போனார்கள்.

ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லாமல் தானே சாப்பிட நினைப்பது நரகம். அடுத்தவருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவது தான் சொர்க்கம் என்பதாகும் என்ற உண்மையை உணர்ந்து நாமும் இச்சமூகத்தில் பரஸ்பரம் பகிர்ந்து சாப்பிடுவோம்.

திருச்சிற்றம்பலம்!

இறை பணியில்
வாசு ஜி

Monday, 4 April 2016

Know the base rules before fixing the day for Marriage

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Thursday, 31 March 2016

Why Nivethyam for God...


நிவேதனம்


ஸ்வாமி நைவேத்யம் எதற்கு ………… !!
இவ்வளோ நாளா பூஜ செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்டாரா என்று கிண்டல் செய்பவர்களே …..
நைவேத்யம் என்பது கடவுளிடம் அறிவிப்பது …  காட்டுவது.
தேவதைகளுக்கு நம் போல் உண்ணத் தேவையில்லை.
பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள்.
இதற்காகவே ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
தோஷங்கள் நீக்கப்பட்ட உணவே ஆரோக்யமான உணவு !!
இன்னும் விரிவாக காண்போம்……..
குருகுல வாசத்தில் குருவிடம் ‘ நாம் நிவேதிக்கும் பதார்த்தங்கள் ….
பகவான் ஏற்றுக் கொள்கிறானா..?
ஏற்றுக் கொண்டிருந்தால் அளவு சிறிதும் குறையாது அப்படியே இருக்கிறதே.?
இது எப்படி என கேட்கிறான்..? சீடன்
குரு சிறிது புன்னகைத்து விட்டு மெளனமாகிறார்…
சீடனுக்கு குருவையே மடக்கி விட்டோமென சந்தோஷம்…..!
  மாலை வகுப்பு தொடங்குகிறது.
எல்லோரும் சந்தையாய் ஒலிக்கிறார்கள்.
குரு சந்தேகம் கேட்ட சீடனை தனியே சொல்ல சொல்கிறார்.
அவனும் தெளிவாய் சொல்கிறான். மீண்டும், மீண்டும்  அவனை சொல்ல சொல்ல அவனும் தவறின்றி தெளிவாய் கூறுகிறான்.
இது எதிலிருந்த பாடம் என்கிறார் குரு…
இந்த சுவடியிலிருந்து இந்த பாடம் என கூறுகிறான்…
நீ இத்தனை முறை தெளிவாய் இதிலிருந்ததை எடுத்து ஒப்பு வித்திருக்கிறாய் ஆனால் அதிலுள்ள எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கிறது என்றார்….
சீடன் வெட்கி தலை குனிந்து குருவின் பாதம் பணிகிறான்…
இதிலுள்ள எழுத்தின் ஸ்வரத்தை நாம் எடுத்து கொள்வதை போல்,பகவானுக்கு ஸமர்பிக்கும் பதார்தத்தில் ஆவியை அவன் புசித்து அமுதத்தை அப்படியே நமக்கு திருப்பி தருகிறார் என விளக்கினார் குரு….
இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 30 March 2016

Some of the Dont's prescribed in Sashtra..


செய்யக்கூடாத செயல்கள்


ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது, பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது.
மேலும் கணவன் கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1. கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2. தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3. நிலையில் அமரக்கூடாது
4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11. ஆலயத்தில் இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
12. ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும், தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன், வில்வமரம், பசு, தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும், எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!
இறை பணியில்
வாசு ஜி.

Krishna story 13

லீலை கண்ணன் கதைகள்.....13
வசுதேவரும் நந்தகோபரும் ......

சென்ற பதிவில் ரோகிணி, யசோதையின் குழந்தையால் கோகுலமே கொண்டாட்டமாக இருந்ததை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த பதிவில்...
கம்சனுக்குக் கப்பம் கட்டுகிறவர்களில் ஒருவர் நந்தகோபர். ஒவ்வொரு வருடமும் அவர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவது வழக்கம். இந்த வருடம் கப்பம் கட்ட வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் அவர் மதுரா சென்றார். நந்தகோபர் மதுரா வந்திருக்கிறார் என்று கேள்விபட்டதும் வசுதேவர் அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றார். நந்தகோபரும் வசுதேவரும் நெருங்கிய நண்பர்கள். நந்தகோபரைக் கண்டதும் வசுதேவர் அன்பு பொங்க அவரை இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார்.

இருவரும் அவரவர் நலன்களைப் பற்றி வெகு நேரம் விசாரித்தார்கள். தம்முடைய மனைவி ரோகிணிக்கும் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கும் கோகுலத்தில் இடம் கொடுத்ததற்காக வசுதேவர் நந்தகோபருக்கு நன்றி செலுத்தினார். கிருஷ்ணன் தம் குழந்தை என்று அறிவிக்காமல் அந்தக் குழந்தையின் நலனைப் பற்றி விசாரித்தார். கோகுலத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் நந்தகோபர் சொல்ல, அதைக் கேட்டு வசுதேவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் கோகுலத்தில் எதாவது தகராறு நிகழும் என்று வசுதேவர் எதிர் பார்த்ததனால் விரைவாக ஊர் திரும்பும்படி நந்தகோபரைக் கேட்டுக்கொண்டார். நந்தகோபரும் வசுதேவரிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது நண்பர்களுடன் மாட்டு வண்டிகளில் தம் இருப்பிடமான கோகுலம் திரும்பினார். பயணத்தின் போது நந்தகோபர் கடவுளைத் தியானம் செய்து கொண்டே போனார். ஏதோ ஆபத்து இல்லாவிடில் வசுதேவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் நினைத்து கொண்டே போனார்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்........

இறை பணியில்
வாசு ஜி.

Monday, 28 March 2016

Gomatha smiles

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.

அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.

அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.

எந்த தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.

பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.

ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.

அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.

அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.

ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.

அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.

என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.

உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.

ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.

எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?

உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்).

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 26 March 2016

One inch difference

image
ஒரு இஞ்ச் வித்தியாசம்.
காஞ்சிபுரத்தில், எண்ணியது நிறைவேறும்!  ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, ஒருநாள் பெரியவாளிடம் கேட்டார்…..“பரமேஸ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், முருகன்-ன்னு எல்லா தெய்வங்களும் இங்க…காஞ்சிபுரத்ல இருக்காடா! இதவிட, காஸிதான் விஸேஷம்-ன்னாலும் காஞ்சிபுரமும், அதுக்கு ஸமமான ஸ்தலம்! ஒனக்குத் தெரியுமோ?……..
…….இங்க, காஞ்சிபுரத்ல ஏழு கொளம் இருக்கு! இதுல….. தெனோமும் ஒரு கொளத்ல ஸ்நானம் பண்ணிட்டு, எல்லாக் கோவிலுக்கும் போயி ஸ்வாமி தர்ஸனம் பண்ணிட்டு, மனஸ்ல வேண்டிண்டா….. நெனச்ச கார்யம் கட்டாயமா நடக்கும்!….”
ஸீரியஸ்ஸாக பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு நமுட்டு சிரிப்போடு, தன் “குழந்தை சிஷ்யனைப் பார்த்து……
“காஸி-ங்கறதை பிரிச்சு சொல்லு பாக்கலாம்!…”
“கா……..ஸி…..!..”
“பேஷ்! காஞ்சி…..பிரிச்சு சொல்லு பாக்கலாம்”
“கா……ஞ்…….சி……”
“பாத்தியா? பாத்தியா? காஸிக்கும் காஞ்சிக்கும், ஒரு ‘ஞ்’ [inch] தாண்டா வித்யாஸம்!….”
அதிஸயித்தார் ஶசிஷ்யர்! என்ன அழகான ‘தங்க்லீஷ்’ ஸ்லேடை!
காஸியில் கபாலீஸ்வரனாய், காஞ்சியில் காமாக்ஷியாய் அருள்பாலிக்கும் நம் காஞ்சிநாதன், அத்வைதாச்சார்யனாகவும் இருப்பதால், நமக்கும் அவருக்கும் அணுவளவு inch கூட ஜீவ-ப்ரஹ்ம பேதம் இல்லாமல் அழித்து, தன்னுருவோடு சேர்த்துக் கொள்ள ப்ரார்த்தனை செய்வோம்.

Monday, 21 March 2016

Path of Dharma finally leads to..

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.

பின்தொடர்ந்த நாய்

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் வீழ்ந்தான்

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.

அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 19 March 2016

Benefits of doing Karma

கர்மாவுக்குண்டான பலன்...!!! -மஹா பெரியவா

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை.........

"பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா.........இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை........அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா........இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்......பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்" என்று ப்ரார் த்தனை பண்ணினார்கள்.
...
"ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு.........." என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோட அர்த்தம் தெரியுமா?"

ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

"POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார். சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா..........PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா மாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ....அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!" கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

..அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கி விட்டார்.......

இறை பணியில்
வாசு ஜி.

Krishna story 12

லீலை கண்ணன் கதைகள்....... 12
கோகுலத்தில் கொண்டாட்டம்....

சென்ற பதிவில் கம்சன் மீண்டும் கொடுராமாக மாறியதை பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

யசோதைக்கு யோகமாயை பெண்ணாகப் பிறந்த சமயம் கோகுலத்தில் இருந்த எல்லோருமே நினைவிழந்த நிலையில் இருந்தார்கள். அதனால் வசுதேவர் குழந்தைகளை மாற்றிக் கொண்டுபோனது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆழ்ந்த நித்திரையில்ருந்து விழித்துக் கொண்டதும் யசோதைக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்கிற செய்தியை ஊரெங்கும் தெரிவித்தனர். யசோதையின் கணவரான நந்தகோபரோ கோகுலத்தின் தலைவர். அதனால் கோகுலமே குழந்தையை பார்க்க யசோதை வீட்டில் திரண்டது.

பிரபஞ்சத்தின் தலைவரான விஷ்ணு, அங்கே தமது தாயாரின் பக்கத்தில் ஒரு குழந்தையாகப் படுத்திருந்தார். சகல துன்பங்களும் விலக வேண்டும் என்பதற்காக அந்தணர்கள் புனித மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். நந்தகோபர்  எல்லோருக்கும் விலையுர்ந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். கோகுலம் முழுவதும் விழாகோலம் பூண்டது. சங்கீத வித்வான்கள் கீதங்கள் பாடினார்கள். தாள வாத்தியங்கள் முழுங்கின. வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு தெருக்களில் பன்னீர் தெளிக்கப்பட்டது.

அதே சமயத்தில், வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியும் ஒரு குழந்தையை ஈன்றேடுத்திருந்தாள். கம்சனின் கொடுமைக்குப் பயந்து அவள் கோகுலத்தில் ஒளிந்து கொண்டிருந்தாள். கோபிகளுக்கிடையில் யசோதையும் ரோகிணியும் தங்கள் பிள்ளைக் குழந்தைகளுடன் அரசியர்களைப் போல விளங்கினர். ரோகிணியின் மகன் சிவப்பாக இருந்தான். யசோதையின் மகன் கருப்பாக இருந்தான்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்..........

இறை பணியில்
வாசு ஜி.

Friday, 18 March 2016

Krishna story 11

லீலை கண்ணன் கதைகள்....... 11
கம்சனின் துர்ப்போதகர்கள்....

கம்சனுக்கு ஒரு பலவீனம் இருந்தது. நல்லவர்கள் மத்தியில் இருக்கும்போது அவன் மிகவும் நல்லவனாக நடந்துக் கொள்வான். ஆனால் அந்த நல்லவர்கள் அவனை விட்டு விலகியவுடன், அவனுடைய தீய குணம் அவனைப் பற்றிக் கொண்டுவிடும். அடுத்த நாள் காலை அவன் தன் அமைச்சர்களை அழைத்து சிறையில் நடந்த விபரீ தச் சம்பவங்களையும் துர்க்காதேவி அவனைப் பார்த்துச் சொன்னதையும் விவரித்தான். அவனுடைய அமைச்சர்கள் எல்லோரும் மனித உருவிலுள்ள அரக்கர்கள். அதனால் அவர்கள் இயல்பிலேயே தேவர்களை வெறுத்தனர்.

அதான் அவர்கள் கம்சனைப் பார்த்து, "உங்களுடைய எதிரி வேறு எங்கோ பிறந்து விட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறானால் அந்தக் குழந்தையை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது மதுரா நகருக்கு அப்பால் வேறு ஏதாவது ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோதான் இருக்க வேண்டும். ஒருவேளை ஆயவர்கள் வசிக்கும் இடங்களிலும் இருக்கலாம். அதனால் பத்து நாட்களுக்குள் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் நாம் கொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

"இன்னும் அந்தணர்கள் தேவர்களுக்கு வேண்டியவர்கள். அதனால் தேவர்கள் பூமிக்கு வந்தால் அந்தணர்களின் வீடுகளில்தான் ஒளிவார்கள். நாம் எல்லா அந்தணர்களையும் கொடுமைப்படுத்த வேண்டும்" என்று சொன்னார்கள். தன் நண்பர்களின் துர்ப்போதனையைக் கேட்டதுமே சற்று முன்புவரை தன்னிடம் இருந்த நல்ல குணத்தைக் கம்சன் இழந்தான். தன் ஆலோசகர்கள் கூறிய கொடுஞ் செயல்களுக்கு சம்மதித்தான்.

உடனேயே அந்த அரக்கர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றார்கள்; அந்தணர்களை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களுடைய தீய செயல்களுக்காக, மரணம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Some ways to bring home The Lakshmi kadaksham..


பணம் வர தாந்திரிக ரகசியங்கள்

FEATURED


வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பித்ருக்களை மட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 16 March 2016

Krishna story 10

லீலை கண்ணன் கதைகள்....... 10
யோகமாயை........

வசுதேவர் குழந்தையை மாற்றிவிட்டு மதுரா திரும்பினார்.தேவகியின் பக்கத்தில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் குரல் கேட்டதும் காவலர்கள் கம்சனிடம் ஓடிச் சென்று "அரசே! தேவகிக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தங்களிடம் செய்தி  சொல்லுவதற்காக நாங்கள் ஓடி வந்தோம்" என்று சொன்னார்கள். தூக்கம் வராமல் கம்சன் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் போய் எத்தனையோ நாட்களாகிவிட்டன. தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றிய பயமே அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. மன நிம்மதி இல்லாத அவனால் எப்படி தூங்க முடியும்? குழந்தை பிறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் பக்கத்தில் இருந்த ஒரு கத்தியைக் கையிலேந்தி அவன் சிறையை நோக்கி விரைந்தான்.

கருணையற்ற முகத்துடன் கம்சன் தன்னை நோக்கி வருவதைத் தேவகி பார்த்தாள். அவள் அவன் காலடியில் விழுந்து, "என் அருமை அண்ணா! இவள் உன் மருமகளுக்குச்  சமம். இவளைக் கொல்லாதே. இவள் ஒரு பெண். ஒரு பெண்ணினால் உன்னை என்ன செய்ய முடியும்? இவள் பெண்ணாதலால், உன்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை இவளால் நிறைவேற்ற முடியாது. தயவுசெய்து இவளை விட்டுவிடு. நீ என் எத்தனையோ குழந்தைகளைக் கொன்று விட்டாய். இந்த ஒரு பெண்ணையாவது எனக்கு விட்டு வை" என்று கெஞ்சினாள், கதறினாள். அழுதுகொண்டே அவள் அந்தக் குழந்தையைத் தன மார்போடு அனைத்துக் கொண்டாள். அவளுடைய கண்ணீர் அந்த குழந்தையின் உடலை நனைத்தது. ஆனால் அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது ஒன்றும் கம்சன் காதில் விழவில்லை. ஏதோ வெறி பிடித்தவன் போல குழந்தையை அவளிடமிருந்து பறித்து, அதன் சின்னசிறு கால்களைப் பற்றிக் கொண்டு அதை ஒரு கல்லின் மீது அறையப் போனான். ஆனால் அந்த குழந்தையோ யோகமாயை! அதனால் அது அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே உயரச் சென்று, துர்க்காதேவி உருவில்  காட்சியளித்தது. துர்க்கைக்கு எட்டுக் கைகள் இருந்தன. கைகளில் பலவித ஆயுதங்கள் காணப்பட்டன.

துர்க்கை கம்சனைப் பார்த்து, "அடே மடையா! எதற்காக வீணாக என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்லுவதாக உள்ள குழந்தை ஏற்கனவே பிறந்து எங்கோ வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவையின்றி பச்சிளங் குழந்தைகளைக் கொல்லாதே. உன் உண்மையான எதிரியைத் தேடு" என்று சொல்லிவிட்டு மறைந்தாள். கம்சன் தூர்க்காதேவியின் பக்தன். துர்க்கை தன் எட்டுக் கைகளுடன் அவன் முன் தோன்றியது அவன் மனதை மாற்றியது.

தூர்காதேவியை ஈன்றுஎடுத்த  தேவகி சாதாரணப் பெண்ணாக இருக்க முடியாது என்று நினைத்தான். தேவகிக்கும் வசுதேவருக்கும் தான் இழைத்த  அக்கிரமங்களைக் குறித்து அவன் வருத்தப்பட்டான். உடனே, தன கைகளினாலேயே அவர்களுடைய கைகளில் பூட்டியிருந்த சங்கிலிகளையும் களைந்தான். மிக்க அடக்கத்துடன் அவர்களைப் பார்த்து, "என் அருமைச் சகோதரியே! என் சகோதரரே! உண்மையிலேயே நான் ஒரு பாவி. என்னுடைய கொடுஞ் செயல்களைக் குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். குழந்தைகளைக் கொன்ற பாவத்தை நான் செய்துள்ளேன். எனக்கு என்ன நரகம் கிடைக்குமோ இரக்கமற்ற கொடுஞ் செயல்களைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்" என்றான்.

கண்களில் கண்ணீர் வழிய அவன் தன் தங்கை காலிலும் அவளுடைய கணவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பெருந்தன்மை வாய்ந்த தேவகியும் வசுதேவரும் அவனை மன்னித்து அவன் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை மறந்து வீடு திரும்பினர். அவர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கொண்டே கம்சன் சற்று மன நிம்மதியுடன் தன் அரண்மனை திரும்பினான்.

இறை பணியில்
வாசு ஜி.

Service of Lakshmana to Lord Rama

ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று கட்டளையிட்டார். அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட  மகரிஷி, என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து விடுவேன், என்று கூச்சலிட்டார்.

அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா.... தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார். லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய், என்றார். அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை துõங்காப்புளி என்பர். அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்.

இறை பணியில்
வாசு ஜி.

Tuesday, 15 March 2016

Mahaperiyavalai parkanum

பெரியவாளப் பாக்கணும்…

image
 பெரியவாளப் பாக்கணும்……
இது மனஸை நெகிழவைக்கும் பேரருள்……
பெரியவா ஸாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே பாரிஷதர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….
“நா…. பெரியவாளை தர்ஶனம் பண்ணணும்”
யாரென்று பார்த்தால்…… ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.
“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது…….. ஸாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. காலேல தர்ஶனம் பண்ணு”
பாரிஷதர் சொன்னார்.
இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாதே!
சிறுவன் விடுவதாயில்லை!
“எனக்கு இப்போ பசிக்கல… பெரியவாளை மட்டும் எப்டியாவது தர்ஶனம் பண்ணணும் அண்ணா…”
மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். பாவம்!
12 வயஸுக்குள், 80 வயஸு கண்டவர்களின் கஷ்டங்கள் அத்தனையும் பட்டுவிட்டான் என்பதாலோ என்னவோ, தன் ஸாமீப்யத்திலேயே அவனை அன்று தூங்க வைத்தார்! 
மறுநாள் காலை பெரியவா…. சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
“ஏம்பா…. எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கயிருக்கா?……..”
ஸ்ரீ மாதாவின் குரலை, அந்த கன்று இனம் கண்டுகொண்டு விட்டது! கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….
“பெரியவா….. நா… மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்.. எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா…. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார்! அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா… பாவம்! அப்றம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல ஸமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..
சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்….
…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..!”
இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
“……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடேஸி வரைக்கும் பாக்க முடியல பெரியவா! அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது! எனக்கு இன்னும் பூணூல் போடலங்கறதால, கார்யம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…! எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது பெரியவா…..!
சுற்றி இருந்தவர்கள் கண்களும் நீரைப் பெருக்கின….
“……இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என்னோட அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணணும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு எனக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கு பெரியவா. ஆனா… நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே!அதான்…..ஒங்களை தர்ஶனம் பண்ணினா… எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்துட்டேன்…..பெரியவா...”
அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சில வினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே தன்னிடம் வரவழைத்திருக்கிறார்!
“ஸெரிடா…. கொழந்த! நீ… கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”
“ஸரி” என்று ஸந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள், பெரியவா தர்ஶனத்துக்கு வந்தார்கள். அவர்கள் வெளியே சென்றதும்,எதேச்சையாக!! அந்த பையன் அந்தப் பக்கம் வரவும், பெரியவா அவனிடம்……
” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவாள்ளாம்… போய்ட்டாளான்னு பாரு! போகலேன்னா, நா… கூப்டேன்னு சொல்லி கூட்டிண்டு வா! “……….
அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
பெரியவா ஸங்கல்பம்….. ! அவர்கள் கிளம்பவில்லை!
ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்ல, நீ இல்ல” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
கடைஸியாக வந்தவரைப் பார்த்ததும், பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு.
“ம்ம்ம்ம்..இவரத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்த! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு”
பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாஶம்!
“பெரியவா…….! என்னோட அக்கா… பம்பாய்ல இருக்கா! அவாத்லதான் இந்த பையனோட அம்மா ஸமையல் வேலை பாத்துண்டு இருந்தா.! அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னும், என் மூலமாத்தான் அவா சொல்லிண்டிருக்கா…….”
மனஸார ஒப்புக்கொண்டார்.
ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு… இந்த கொழந்தை…. பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்….! இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போயி, அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவங்கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கும்….. நீதான் எல்லாம் பண்ணணும்….. என்ன செய்வியா?”
அதிகாரிக்கோ ஸந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! ப்ரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு, தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் ஸொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார்.
மார்க்கபந்துவான பெரியவாளை நம்பினார், என்றுமே கெடுவதில்லை ! என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.
இறை பணியில்
வாசு ஜி.

Monday, 14 March 2016

Mahamanthra of the Supreme given by Periyava

காஞ்சி பெரியவர் அருளிய மகாமந்திரம்!!

காஞ்சி மகா பெரியவரின் குரலை பதிவு செய்து "தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி இதுவரை ஏழு பாகமாக வெளியிட்டுள்ளவர்.

தெய்வத்தின் குரல் தவிர, காமகோடி, ராமகோடி, காமாஷி, கடாஷி, ஸ்ரீ சாரதாதேவி வாழ்க்கை வரலாறு, அறிவுக்கனலே, அரும்புனலே, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர் ரா.கணபதி

ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே எழுதியவர். ஆன்மிக எழுத்தின் மீது கொண்ட தாகம் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர். கடந்த  மகாசிவராத்திரியன்று உட்கார்ந்து சிவநாமம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்தது.

அவரது எழுத்து என்பது உணர்வு பூர்வமானது, தான் அனுபவித்த சந்தோஷம் வாசகர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற தாகத்தை கொண்ட எழுத்தாகும். சான்றுக்காக அவர் எழுதிய ஒரு கட்டுரை ஒன்று இங்கே இடம் பெறுகிறது. காஞ்சி பெரியவர் அருளிய மகா மந்திரம் தொடர்பான இந்த கட்டுரை மூலம் ரா.கணபதிக்கு எழுத்தால் இங்கே ஒரு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் "ஓம்' மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான். ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம்; ஏனையோர் முதலில் "ஓம்' என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளனர்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே "ஓம்' என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.

இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன்.
முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் மாது, நேற்றிரவு சொப்பனத்தில் வந்து ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?'' என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாக (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.'' இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம் பகவ'': அம் பகவ'': அம் பகவ'': என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் "அம் பகவ': மந்திரோபதேசம் பெற்றோம்.
ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் "இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்' என்றும் கூறினார்கள்.
ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத "அம் பகவ': என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!
"பகவ': என்பதற்கு "பகவானே!' என்று பொருள். "அம்' என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் "அம் பகவ!' எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், "பகவ;' என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை அதுவும் பகிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷமான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

ஆதலால் எல்லோரும் "அம் பகவ" என்னும் மகா மந்திரத்தை முடிந்த வரை சொல்லி கடவுளின் அருள் பெற்றிடுங்கள்..

இறை பணியில்
வாசு ஜி.