Monday, 29 February 2016

Story of Lord Krishna 1

கண்ணன் கதைகள்: 1
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாக்குறுதி....

முன்னொரு சமயம், கொடியவர்களும், அகந்தை கொண்டவர்களுமான பல அசுர அரசர்களின் பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி தவித்தாள். உடனே அவள் ஒரு பசுவின் உருவை எடுத்துக் கொண்டு, பிரம்மாவைச் சென்று பார்த்தாள். தன்னுடைய துன்பத்தை அவள் அவரிடம் சொல்லி கதறினாள். பிரம்மா அவள் மீது இரக்கம் கொண்டார்.

பூமாதேவியைப் பார்த்து அவர், "குழந்தாய்! உன்னை ஒரே ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். அவர்தான் ஸ்ரீமந்நாராயணன். அவரிடம் அடைக்கலம் புகுவோம், வா'' என்றார்.

பரமசிவனையும் இன்னும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு, பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கும் வைகுண்டத்தை அடைந்தார். அங்குள்ள திருபாற்கடலின் கரையில் நின்று கொண்டு, எல்லோரும் மிக்க பக்தியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் தியானம் செய்தார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருந்து பிரம்மாவின் காதுகளில் கணீர் என்று ஒரு குரல் ஒலித்தது. அது மகாவிஷ்ணுவின் குரல்.

பிரம்மா தம் தியானத்திலிருந்து விழித்து எழுந்து, மற்ற தேவர்களைப் பார்த்து, "என் தியானத்தில் நான் நாராயணனின் குரலைக் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன், கேளுங்கள். பூமாதேவியின் கஷ்டத்தை அவர் ஏற்கனவே அறிந்துள்ளார். உலகில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாகப் பிறக்க, அவர் தீர்மானித்துள்ளார். அவருக்கு உதவ நீங்கள் எல்லோரும் யது குலத்தில் பிறக்க வேண்டும். அவர் பூலோகத்தில் உள்ளவரை நீங்களும் அங்கு அவரோடு இருக்க வேண்டும்" என்றார்.

பிரம்மா சொன்னதைக் கேட்டு, பூமாதேவியும் மற்ற தேவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மகா விஷ்ணுவின் வாக்குறுதி அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. எல்லோரும் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள்...

இறை பணியில்
வாசு ஜி.

Effects of Kaliyuga predicted before 5000 years

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்:
 5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]

3. சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]

9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.

இறை பணியில்
வாசு ஜி.

Sunday, 28 February 2016

Who the parents are

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. 

அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.

மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான்.  மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது!!!!??

இறை பணியில்
வாசு ஜி.

Why so many Gods in Hindu dharma

இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

ஏன் இத்தனை தெய்வங்கள்?
ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்

இந்த கேள்வியை ஆராயும்முன் முதலில் நமக்கு ஏன் இத்தனை குணங்கள் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம். ஏன்? நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் ஏன்? பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோமே ஏன்? வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம் ஏன்? அலுவலக மேலதிகாரியிடம் ஏன் பாசத்தை பொழிவதில்லை? இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு பல உருவங்கள் ஏன் இருக்கக் கூடாது? இது ஒரு வாதமே என்று எடுத்துக்கொண்டாலும் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து தர்மத்தில் பல தெய்வங்கள் இருப்பது வேறு எந்த மதங்களிலும் இல்லாத ஒரு சிறப்பாகவே கருத வேண்டும். ஏனெனில் கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த ஒரு தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இப்போது மேற்குறிப்பிட்ட கேள்விக்கான புரிதலுக்கு வருவோம். பொதுவக ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயல்பானதே! அது போலவே பல கடவுளர்களின் குணங்களும் அதற்கேற்ற கதைகளும் மக்கள் வாழிடத்திற்கு ஏற்றார்போல அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும் உண்டு. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரை வணங்குவதும் , எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக்காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்னரையும் வணங்குவர். பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாக வணங்குவதைக் காணலாம்.

அதிக கோபம் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேலும் சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.

மொத்தத்தில் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே தியானிப்பதற்கும் பக்தியை மனதில் இருத்தி , மனதை ஒரு நிலைப்படுத்தி நிரந்தரமான அமைதியை அடைந்து நல்வழிப்பட மனிதர்களுக்கு பல்வெறு உருவங்கள் கொண்ட தெய்வ வழிபாடு சிறப்பாக உதவுகிறது.

இந்த பல உருவ வழிபாட்டை இன்னொரு நிலையிலும் பார்க்க வேண்டும். ஒரு மார்கத்திற்கு ஒரே ஒரு உருவம் தான் கடவுள் என்று மொத்த பேரும் அந்த உருவத்தை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை நிரைவேறாமல் போனால், அந்த உருவத்தின் மீதான நம்பிக்கை குறையும் அதே நேரத்தில் அந்த உருவத்தை மையப்படுத்தும் மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை போய்விடும். ஆனால் இந்து தர்மத்தில் ஒரு உருவ தெய்வத்தின் மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம். அதாவது ஒரு மனிதன் எந்த உருவத்தின் வாயிலாக‌ வழிபட்டாலும் தத்துவமார்க்கமான தர்மத்தை கடைபிடிக்கும் வாழ்க்கைக்குள் வந்து விட வேண்டும் என்பதேயன்றி உருவ வழிபாடு மட்டும் முக்கிய நோக்கமல்ல.

ஆதலால் மீண்டும் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 27 February 2016

Spiritual thoughts from Kirubananda variyar

ஆன்மிக சிந்தனைகள் -- கிருபானந்த வாரியார்
Sri Muruga Kirubananda Variyar 

* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.

இறை பணியில்
வாசு ஜி.

Which is great Dhanam or Dharmam

எது தானம் ? எது தர்மம் ?
~~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.

பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்.

இறை பணியில்
வாசு ஜி.

Friday, 26 February 2016

ur nakashtras ur characters

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.
In service
Vasu G.

Surrender the Mind to God is all

CONVERSATIONS WITH ANNAMALAI SWAMI
Annamalai Swamigal 

Q: Swami kept mauna [silence] for at least a year in the those days it must have been very peaceful and quiet here.
Nowadays the area is filled with the noise of loudspeakers, buses.
trucks, radios, etc. I feel that I would also like to keep mauna for some time. But is there any point in keeping silent when there is much noise around?

AS: Mauna means inner silence, not outer silence. If there are a
lot of noises and disturbances outside, we should take them as manifestations of God. If we take the attitude that they are
disturbances, we are resisting what IS. This will only create anxiety within us. If we see all that is as divine, nothing will ever disturb
us.

You should not make judgements about the world. You are
thinking, 'A quiet environment is good; a noisy one is bad'. If you
have thoughts like these you will inevitably get caught up in the workings of the mind. There is nothing wrong with the world or with the environment you live in. The only defects are in the mind which is looking at the world. If you change the outlook of the mind, the world automatically changes. Alternatively, you can give your whole mind to God.

The saint Jnanasambandhar said: 'There is a way that we can
live happily in this miserable world. That way is to give our minds
to God.'

Bhagavan said: Surrender your mind to God and see all forms as God. Have impartial love towards all beings. One who lives like
this, he alone can be happy.'

In the Divine services
Vasu G.

Mahaperiyava's leelas.. Faith in Guru do...


50 ரூபாய் 50 கோடி ரூபாயாகிய
அதிசயம்…”
ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன்  பெரியவாளை  தரிசிக்க வந்தார்.
“கல்கத்தால நல்ல சென்டரான எடத்துல,நல்ல விசாலமா  ஒரு  வீட்டை  வாங்கு.  மண்டபம் வெச்ச  மாதிரி  வீடு.  அதுல  வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு  தனியா  ஒரு ஸாமவேத பாடசாலை  ஒண்ணை  ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?”
“அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு  வாடகைக்  கட்டடத்ல  இருக்கு.  அது நல்ல சென்டரான எடம்..”
“ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த
கட்டடத்தை வாங்கிடு!  பஜனை  ஸமாஜ்காரா அவாபாட்டுக்கு அதுல
இருக்கட்டும்.”
“அதை வாங்கணும்ன்னா நெறைய
ஆகும் பெரியவா…. எங்கிட்ட  அவ்வளவு பணம் இல்லியே! “
“எவ்ளோவ் ஆகும்?”
“கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும்
ஆசையாக இருந்தது.  அதே  சமயம்  பணத்துக்கு என்னசெய்வது? என்ற
கவலையும் சேர்ந்தது.
“நீ…இப்போ  நேரா  மெட்ராஸ்  போ!  அங்க அண்ணாத்துரை  ஐயங்கார்கிட்டேர்ந்து  அம்பது ரூவா  வாங்கிக்கோ! அது அம்பது கோடி
பெறும்!…” புன்னகைத்தார்.
ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா?
பெரியவா சொல்லி விட்டார்  என்பதால்  உடனே மெட்ராஸ் வந்தார்.  அண்ணாத்துரை  ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக  ஐம்பது  ரூபாயைப் பெற்றுக் கொண்டு,  அன்றே  கல்கத்தா போய்ச் சேர்ந்தார்.  பஜனை  ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர்  ஆஸுடோஷ்  முகர்ஜி,  பெரிய கோடீஸ்வரர்.  அவரை  நேரில்  சந்தித்து இதுபற்றிப் பேசுவதற்காக
அவருடைய பங்களாவுக்குச்  சென்றார்  நரஸிம்மன்.
இவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்!வாருங்கள்! உங்களுக்காகத்தான்
காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்  ஆஸுடோஷ் முகர்ஜி.  இவருக்கோ  ஒரே ஆச்சர்யம்!
“நேற்று இரவு என்னுடைய கனவில்
அன்னை மஹா காளி  வந்தாள்!  நீங்கள்  குடுக்கும்  பணம் எதுவானாலும்  வாங்கிக் கொண்டு,  அந்தக் கட்டடத்தை  குடுத்து  விடும்படி  எனக்கு உத்தரவிட்டாள்.  அன்னையோட  உத்தரவை நிறைவேற்ற,  உங்களுக்காக  காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று
பெங்காலியில் மிகுந்த  நெகிழ்வோடு  கூறினார்.திரு.நரஸிம்மன்.
மானசீகமாக பெரியவாளின்
திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன
லீலை இது? “நீ…இப்போ  நேரா  மெட்ராஸ்  போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார் கிட்டேர்ந்து அம்பது ரூவா  வாங்கிக்கோ!  அது  அம்பது  கோடி  பெறும்”என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக  வந்து  உத்தரவையும் போட்டு, இதோ….. ஐம்பது  ரூபாயில்  ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான்
அலகிலா விளையாட்டுடையான்  என்று  மஹான்கள் கொண்டாடுவார்கள்.  தனியாக “செஸ்”விளையாடுவது போல்,பகவான் நம்மையெல்லாம்  வைத்து  விளையாடிக் கொண்டிருக்கிறான்.  கீதையில ்“உனக்குண்டான  கர்மத்தை  செய்.  பலனை எங்கிட்ட  விட்டுடு” என்று சொன்னதை பெரியவா  ப்ரூவ் பண்ணிக் காட்டினார்.
உடனேயே மளமளவென்று காரியங்கள்நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை
சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்”  என்ற பெயரில் பெரியவா  சொன்ன மாதிரி ஸாம வேத பாடசாலையும்  தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து  கொண்டிருக்கிறது.
ஜய ஜய சங்கர…ஹர ஹர சங்கர…
இறை பணியில்
வாசு ஜி.

Manase relax and laugh pls

உங்களைப்பற்றி_உங்களுக்கே_தெரியாத_ஐந்து_விஷயங்கள்....

மிக மெதுவாக படிக்கவும்...!!
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா

1. உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம்.
ஏன்னா மொத்தமிருக்குற 24 ஊதா'வையும் நீங்க முழுசா படிக்கல...!!

2. உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?? நடுவில் ஒரு "ஊகா" இருக்கு நீங்க சரியா கவனிக்கல..!!

3. இப்ப நீங்க உடனே அத செக் பண்ணீட்டீங்க..!!

4. அப்படி ஒன்னும் இல்லை...!! நம்மளையே முட்டாள் ஆக்கீட்டானேன்னு, இப்ப மெல்ல புன்னகைக்கிறீங்க..?

5. படிச்சிமுடிச்சிட்டு கண்டிப்பா ஷேர் பண்ணப் போறீங்க...!!

#ஆனா_உங்களைப்பற்றி_எனக்கு_12_விஷயம்_தெரியும்..!!

1. நீங்க போன், டேப்லட், லேப்டாப் இல்ல டெஸ்க் டாப் இதுல ஒன்றை உபயோகப் படுத்தீட்டு இருக்கீங்க...!!

2. அதுல நீங்க இப்ப வாட்ஸ் அப் பாத்துட்டு இருக்கீங்க...!!

3. அதுலயும் குறிப்பா என்னோட பதிவை படிச்சிட்டு இருக்கீங்க..!!

4. நீங்க ஒரு நல்ல மனுசன்.!!

6. உதட்ட குவிக்காம 'ஊ' சொல்ல முடியாது...!!

7. இந்நேரத்துக்குள்ள அதை செஞ்சி பாத்துருப்பீங்க...!!

8. இப்ப கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க..!!

9. உங்க முகத்துல சிரிப்பு இன்னும் மிச்சமிருக்கும்..!!

10. அடடா, நீங்க பாயிண்ட் நெம்பர் "5" படிக்காம விட்டுட்டீங்க...??

11. இப்ப நீங்க 5வது பாயிண்ட தேடுறீங்க..!!

12. இப்ப கண்டிப்பா திரும்ப சிரிப்புத்தான்...!! ஏன்னா..? நான் உங்களப்பத்தி சரியாத்தான் சொல்லீட்டு இருக்கேன்...!!

ஹா.....ஹா.....ஹா.....ஹா

நீங்களும் இப்ப உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறீங்க தானே...!!

நீங்க எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் சத்தமா சிரிச்சா மனசு லேசாயிடுங. ்க..!!

விட்டு_சிரிச்சா_நோய்_விட்டு_போகும்...

Thursday, 25 February 2016

What inspired Kannadasan to write Arthammula Indhumatham

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்...

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது

கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார்.

‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார்...

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

பெரியவா பாதம் சரணம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

இறை பணியில்
வாசு ஜி.

Your action designs ur LIFE

மனிதன் வாழும் வரை அவன் செய்கின்ற செயல்கள் தான் நிரந்தரம்......
எங்கு போனாலும் இறைவனை காண முடியாது...
உள்ளத்தில் உண்மை உணராமல் அவனை அறிய முடியாது...
வாழும் வரை உத்தமனாக வாழ்ந்து விடு...
நாளை நடப்பது உனக்கு தெரியாது.
நேற்று நடந்தது உன் நிணைவிற்கே....
இன்று செய்யும்  ஒவ்வொரு செயலும் உத்தம்மாக விளங்கட்டும்...
நாளை நீயும் மடிந்து விடுவாய்...
கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னை வழி நடத்தாது....
உண்மை உணர்ந்து உத்தமன் பாதை பிடித்து உண்மையாக வாழ்ந்து விடு
ஆலயங்கள் சென்று வணங்கினாலும் மந்திரங்கள் ஜெபித்தாலும் உன்னை உணராமல் எதையும் சாதிக்க முடியாது..
பள்ளம் மேடு அசிங்கம் நீ பார்த்துதான் நடக்க வேண்டும்...
அறிந்து செயல்படு.
உன் வாழ்கை நீ நடத்தும் உண்மையின் வழியில் தொடருட்டும்.....
உன் நடத்தை போக்கு நிணைவில் உண்மை ஒளிரட்டும்....
தர்மம் மறவாதே...
உன்னை மயக்க பல உருவங்கள் உன்னிடம் உயரந்தவன் என்று கூரும்...மயங்காதே
நீயே உயர்ந்தவன்..
மனதை திடமாக்கு..
உண்மை உணர்.
தெய்வம் நீயே தான்...உன்னை அறிந்தால் நீயே உத்தமன் ஆகிறாய்....
சத்குருவை நம்பு..
உன் உடல் பொருள் ஆவி அனைத்தும். அவரிடம் ஒப்படைத்து நம்பிக்கை விடாமுயற்ச்சி கொண்டு அவர் பாதங்களை தழுவி உண்மை மறவாமல் வாழ்ந்து விடு......
அன்பு நன்றி கருனை உள்ளத்துல் வளர்த்து கொள்...
நீயே கடவுள்..வாழும் வரை உத்தமனாக வாழ்ந்துவிட்டால் நீயே முதன்மையாகிறாய்...மறவாதே....
இன்றே உறுதி கொள்...உன் எண்ணம் தூய்மையடையட்டும்...உண்மை மனதில் நிறுத்திக் கொள்.....
வாழ்க எண்ணம்..
வளர்க உன் உத்தம செயல்..

என்றும் இறைபணியில்
வாசு ஜி.

Wednesday, 24 February 2016

How faith should be with God...- gud example


ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.
"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.

சில விநாடிகளுக்குப் பிறகு,
" பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.

மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.

இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
"நிஜம் தான் கிருஷ்ணா...அது
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.

" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.

"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.

இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்.

என்றும் இறைபணியில்
வாசு ஜி

Monday, 22 February 2016

Importance of listening words of Guru

ANNAMALAI SWAMI - FINAL TALKS

Q: I know that listening to the Guru and believing his words is important, when he says, ’You are the Self. The world is not real’ and so on, I can accept that what he says is true, but my belief in the truth of those words doesn't seem to make it my experience.

Annamalai Swami: You must believe the Guru and you must also believe your own experience because the Guru is not telling
you to add another belief to your mind. He is instead telling you
to look at your own experience of yourself, and in doing so,
disregard everything else.

There is a story that Ram Tirtha used to tell:

‘A man who was a little mad lived in a small village with his wife. His friends liked to tease him and make fun of him because they all thought he was stupid.

One day one of them said 'We have some bad news for you.
Your wife has become a widow.'

He believed them and started crying out in grief, 'My wife
has become a widow! My wife has become a widow!'

Some of the people he passed on the street laughed at him and said, 'Why are you mourning? You are very much alive.
How can your wife be a widow if you yourself are alive to complain about it?'

'My closest friends have told me this,' he replied, 'and I trust
them. They are very reliable people. If they are saying that my wife has become a widow, it must be true.’

We would think that a man who behaved like this was utterly stupid because he chose to believe the words of others
instead of his own experience. But are we any better? We
believe, on the basis of indirect information provided by the senses, that we are the body. The experience of 'I am’ of the
Self, is present in all of us, but when the mischievous senses
gang up on us and try to make us believe something that is
patently untrue, we believe them and ignore our direct
experience.

Then we grieve about our state, lamenting, 'I am bound; I am unenlightened; I am not free'.

And even when the Guru comes along and says, 'You are the
Self. You are free. Why do you insist on believing this misinformation that the mischievous senses are giving you?', still you do not believe the truth.

You tell him,’ The senses have always given me reliable
information in the past. I have learned to trust them. What they
tell me must be true.'

And so you go on grieving and complaining, even when your
direct experience and the words of the Guru agree with each other and reveal the truth.


Sunday, 21 February 2016

Importance of Silence 🔇

SILENCE!
' There is a state when words cease and silence prevails.
Silence is also conversation. '
                                         - Sri Ramana Maharishi

Kripananda Variyar’s (Saint) astrologer-brother, warned him to be careful during the malefic effect of Saturn’s rule of 7 ½ years . At the end of the period, Variyar asked his brother, 'What happened? You said I will be affected by Saturn’s influence?' to which his brother replied, 'You are constantly singing the glory of Lord Muruga, how will any planet affect you?'. This is the truth of life. What you talk on, decides the course of your destiny.

Reduce every unnecessary word! This is the fundamental lesson in spirituality. For instance, during Cricket season, people will be discussing with each other about the scores of various cricketers. You want to exhibit your knowledge to others. The score is the same, regardless of how many ever time you discuss it. So why waste your precious time? Why talk unnecessarily about politics? You would have already wasted time watching wrong cinemas? Time and tide wait for none.

If you want, go strive ahead in Spirituality, you must learn to be as silent as possible or talk only essential matter. Just listen. The best way to avoid chatter is to talk less or not talk at all.
-SIVA SHANKAR BABA
#SivaShankarBaba

Pondicherry Mother Birthday 21-02-2016.

Mirra Alfassa (21 February 1878 – 17 November 1973), known to her followers asThe Mother, was the spiritual collaborator ofSri Aurobindo. Her full name at birth wasBlanche Rachel Mirra Alfassa.[1]h
She came to Sri Aurobindo's spiritual retreat on 29 March 1914 in Pondicherry, India. Having to leave Pondicherry during World War I, she spent most of her time in Japan where she met poet Rabindranath Tagore. Finally she returned to Pondicherry and settled there in 1920. After 24 November 1926, when Sri Aurobindo retired into seclusion, she founded her ashram (Sri Aurobindo Ashram), with a handful of disciples. She became the spiritual guide of the community.
The experiences of the last thirty years of Alfassa's life were captured in the 13-volume work The Agenda. In those years she attempted the physical transformation of her body in order to become what she felt was the first of a new type of human individual by opening to the Supramental Truth Consciousness, a new power of spirit that Sri Aurobindo had allegedly discovered. Sri Aurobindo considered her an incarnation of the Mother Divine and called her by that name: The Mother.


Always in the Divine services 
                                                                                                                                       Vasu G

Saturday, 20 February 2016

Be honest with yourself...

*** Be Honest with Yourself ***

How do you arrive at the Self?
Well here is another interesting way of getting to that.
And if you get up in the morning if you feel a little depressed or out of sorts, if you do this you will start to laugh at yourself and you will feel better.
It will make you happy all day.
And here's what you do.

As soon as you get up say to yourself,
"I am not my arms, I am not my legs, I am not my torso,
I am not my head, I am not my bones, I am not my blood,
I am none of these things.
For most of these things are functioning without my knowledge.
My heart beats, I didn't tell it to beat.
I have to go to the bathroom,
I didn't give my body permission to go to the bathroom.
The body wants to eat it gets hungry.
I never told my body to be hungry.
It appears as if I have nothing to do with my body at all".

You go further.
You say to yourself, "How about the world? I am not the world.
The world didn't exist a few moments ago when I was asleep.
Now that I am awake I think about the body, the world, God, work, food, bathroom.
All these things happen when I wake up.
Well if I'm not those things, who am I"?
Who is the 'I' that is experiencing all this? I don't know".

Be honest with yourself.
Don't say, "Oh the 'I' is consciousness".
That's the worst thing you can ever do.
Is to memorize certain words or phraseologies
and use them at your own time.
When you ask the question,
"Then who is experiencing the body?
Who is experiencing the world?"
Be honest with yourself and say, "I don't know? "It's a mystery".

Well then to whom is it a mystery too.
To me.
It therefore seems that if everything is a mystery to me.
'Me', 'me', 'me'.
If I got rid of the 'me', there would be no mystery.
Now how do I get rid of the 'me'.
Who is the 'me'? The 'me' is another word for 'I'.
I believe that everything is a mystery.
I have nothing to do with my body or the world".

So you get back to 'I'.
"Who is this 'I'? I don't know "It's a mystery".
There is the mystery again".
So I'll ask again, "For whom is the mystery for? For me.
Who am I? I don't know "It's a mystery".
For whom is the mystery for?"
As you keep talking to yourself this way something wonderful is going to happen.
Your question will begin to slow down
and you will feel yourself becoming happy.
You may even start laughing at yourself.
And your mind will become quieter and quieter and quieter.
You will begin to feel enormous joy.
Just by doing that technique, without coming to any conclusions.

As you keep asking yourself,
"For whom is the mystery?"
pretty soon you will stop saying I for me.

For there will be a larger space between the question
and the answer.
When you say, "The mystery is for me, I think "It's a mystery", there will be a large pause.

And as you keep reiterating the question the pause becomes larger and larger.
Now the good news is:
That pause is consciousness.
That pause is your reality
Because you will find if you keep doing the process that in that pause there are no thoughts.
There is a calmness, emptiness and you feel wonderful.

~Robert Adams

Friday, 19 February 2016

Yogi Ramsuratkumar Aradhana 20-02-2016

YOGI RAMSURATKUMAR
Yogi Ramsuratkumar (December 1, 1918 – February 20, 2001) was an Indian saint and mystic. He was also referred to as "Visiri samiyar" and spent most of his post enlightenment period in Tiruvannamalai, a small town in Tamil Nadu which is famous for attracting spiritual seekers worldwide and has had a continuous lineage of enlightened souls. He acknowledges the contribution of three of the most well known saints of his time in his evolution to enlightenment. These individuals were Sri Aurobindo, the founder of Integral yoga, Ramana Maharshi, one of the "spiritual supermen" of his time, and Swami Ramdas, Yogi's eventual guru.

Chant this MANTRA 

Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya Guru Raya.


Always in Bhagwan's Service
Vasu G